கடலூர் மாவட்டத்தில் சிபிஎம் பிரச்சாரம்
கடலூர், ஜூன் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாநகரம் இதன் ஒருபகுதியாக கடலூரில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு நகர் குழு உறுப்பினர் எஸ்.கே. தேவநாதன் தலைமை தாங்கினார். மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் பி.வெங்கடேசன், நகர் குழு உறுப்பினர்கள் காசிநாதன், தமிழ்மணி, திருமுருகன், சாகிரா, மற்றும் குடி யிருப்போர் நல சங்கத்தின் சிறப்பு தலை வர் மருதவாணன், ஓய்வு பெற்ற கூட்ட மைப்பின் மாநில தலைவர்கள் மனோகரன், டி.புருஷோத்தமன் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கோண்டூரில் தொடங்கிய பிரச்சார பயணம் மஞ்சக் குப்பத்தில் நிறைவடைந்தது. விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி ராஜேந்திரப்பட்டி னம் கிராமத்தில் துவங்கிய பயணம் வண்ணார்குடிகாடு வழியாக கரு வேப்பிலங்குறிச்சியில் நிறைவடைந்தது. ஒன்றியச் செயலாளர் கே.எம்.குமர குரு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.சங்கரய்யா, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் செந்தில், சேகர், இதயத்துல்லா, விமலா,கிளைச் செயலாளர்கள் சட்டநாதன், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திட்டக்குடி திட்டக்குடி வட்டம், ராமநத்தம் பகுதி யில் வட்டச் செயலாளர் வி. அன்பழகன் தலைமையில் வட்டக்குழு உறுப்பினர் மாயவன், கிளை செயலாளர்கள் குமார சாமி, சண்முகம், ஆறுமுகம், பாண்டியன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். பிரகாஷ், மூத்த தோழர் ஆர்.ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, மாதர் சங்க வட்டச் செயலாளர் முத்துலட்சுமி, வாலிபர் சங்க வட்டச் செயலாளர் சந்தோஷ் குமார், வட்டத் தலைவர் ஹரி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.