tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நெல்லிக்குப்பத்தில்  சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரம்

கடலூர், ஜூன் 12 -  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், வேலையின்மையைப் போக்க வேண்டியும், காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் நெல்லிக்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பங்கேற்றார். நெல்லிக்குப்பம் பெட்ரோல் நிலையத்தில் துவங்கிய பிரச்சாரப் பயணம் அண்ணா சிலை அருகே நிறைவு பெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு பகுதிக்குழு செயலாளர் ஸ்டீபன் ராஜ் தலைமை தாங்கினார். பகுதிக்கு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், ஆர்.வி.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்கு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜெயபாண்டியன், மூத்த தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று கோரிக்கை விளக்க உரையாற்றினர். பகுதிக்கு உறுப்பினர்கள் சுந்தரபாண்டியன், அருண்மொழி, கிளைச் செயலாளர்கள் விக்னேஸ்வரன், முத்துக்குமரன், ரவிச்சந்திரன், மகேஷ், பிரேம் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் கோரிக்கை விளக்கத் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. பகுதிக்கு உறுப்பினர் தர்மேந்திரன் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை மாநகரில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம்

திருவண்ணாமலை, ஜூன் 12 - திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற கிளர்ச்சி பிரசார இயக்கத்திற்கு மாநகர குழு உறுப்பினர் கௌரி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாநகர செயலாளர் எம்.பிரகலாதன், மாநகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இதில், திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்தை முறைப்படுத்தி சாலை யில் வைத்துள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்க ளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. நகரத்தில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வாரி சுத்தம் செய்திட வேண்டும் என்றும் மலை அடி வாரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்தனர். சாலையோர கடை வியா பாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி அரசு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. மேலும் திருவண்ணாமலை நக ரத்திற்குள் கட்டண கழிவறைகளை முறைப்படுத்தி இலவச கழிவறைகள் மாற்றிட வேண்டும் என்றும் இருசக்கர வாகன பாதுகாப்பு நிலையத்தில் வசூ லிக்கும் ரூ.30 கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்றும் நிர்வாகிகள் உரையாற்றினர். இந்த பிரச்சார இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.