tamilnadu

கே.பாலகிருஷ்ணன் அறைகூவல்... (1ஆம் பக்கத் தொடர்ச்சி)

1ஆம் பக்கத் தொடர்ச்சி...

இதேபோல, சமையல் எரிவாயு விலையும் ஓராண்டில் மட்டும் சிலிண்டருக்கு ரூ. 200/- உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மானியம் முழுமையாக வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சமையல் எரிவாயுவுக்கான அரசாங்கத்தின் மானியம் ரூ. 2,573 கோடி ரூபாயாக இருந்தது.அதுவே, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ. 445 கோடியாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ. 345 கோடியாகவும், இறுதியாக ஆண்டு முடியும் கடைசி காலாண்டில் ரூ. 196 கோடியாக வேக வேகமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எரிவாயு விலை றெக்கை கட்டி பறந்துள்ளது. 

2021-ல் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு பெட்ரோலி யப் பொருட்களுக்காக அளிக்கப்பட்டிருந்த மானியம் ரூ. 40,915 கோடியிலிருந்து, நடப்பு ஆண்டிற்கு 14,073 கோடியாக குறைக்கப் பட்டு விட்டது. இந்திய நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலையின்மை ஆகிய கொடுமைகளை எதிர்த்து இரண்டு வார காலம் கண்டன இயக்கங்கள் நடத்திட அகில இந்திய இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இவ்வியக்கத்தை தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதால் ஜூன் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் வட்ட, ஒன்றியதலைநகரங்களில் சக்தியான ஆர்ப்பாட்டம் நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்.எல்)லிபரேசன் ஆகிய கட்சிகள் தீர்மானித் துள்ளன. மாவட்டங்களில் இக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இம்மூன்று நாட்களிலும் தமிழகத்தில் 750க்கும்மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. மோடி அரசின் தடித்தன மான நடவடிக்கைகளை தவிடுபொடியாக்கும் வகையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்தகண்டன இயக்கத்தில் பங்கேற்க வேண்டு கிறோம்.

;