tamilnadu

img

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இலப்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிமாக இருக்கிறது. இந்த நிலையில், கோடை விடுமுறையில் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 
அதில், கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில், சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 

;