சென்னை, ஜன.29- ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறு வனப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் வகையில் வெளியிடப் பட்டுள்ள ஒன்றிய அரசின் இறுதி வரைவு வழிகாட்டு அறிவிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. அந்த வரைவு அறிக்கையை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பல்கலைக்கழக மானியக்குழு சமூக நீதியை அடியோடு குழி தோண்டிப் புதைக் கும் வகையில் வெளியிட்டுள்ள இடஒதுக் கீடு குறித்த இறுதி வரைவு வழிகாட்டுதல் வன்மையான கண்டனத்திற்குரியது. அது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளி யிட்டுள்ள விளக்கம் போதுமானதல்ல. இறுதி வரைவு வழிகாட்டுதலில் இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் அந்தப்பகுதி யை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறு வனங்களில் ஆசிரியர் நேரடி நியமன பணி யிடங்களில் உள்ள இட ஒதுக்கீடு நிலு வைக் காலி இடங்களை பொதுப் பட்டிய லுக்கு மாற்றலாம் என யுஜிசி, நவம்பர் 2023-இல் வெளியிட்ட இறுதி வரைவு இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல, சமூக நீதிக்கும் முற்றிலும் புறம்பானது. பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, உயர் கல்வி நிறுவனங்க ளில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தொடர்ந்து சதி செய்து வருகின்றன. அச் சதியின் ஒரு பகுதியே யுஜிசி வெளி யிட்டுள்ள இறுதி வரைவு ஆகும். ஏற்கெ னவே, பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு முறைக்கான அலகை ஒட்டு மொத்த பல்கலைக்கழகமாக இருந் ததை துறைவாரியாக மாற்றுகிற முடிவை யும், அடுத்து கோவிட் முதல் அலை காலத்தில் ஐஐடி-களில் இட ஒதுக்கீட்டை சிதைக்கிற முயற்சியை தில்லி ஐஐடி இயக்குநர் ராம் கோபால் ராவ் தலைமை யிலான குழு மூலமாகவும் செய்தது.
கடு மையான எதிர்ப்பின் காரணமாக பின் வாங்கியது. மேலும் 2019 - ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் நிய மன சட்டத்தை தொடர்ந்து மீறுகிற, அம லாக்க மறுக்கிற எந்த நிறுவனம் மீதும் நட வடிக்கை எடுப்பதில்லை. இவையெல் லாம் ஒன்றிய அரசு, தான் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நீர்த் துப்போகச் செய்யும் நடவடிக்கை களுக்கு வழிகாட்டுகிறது என்பதன் வெளிப் பாடே. இதனால் ஆயிரக்கணக்கான நிலு வைக் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிற அநீதி அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், 2023 இறுதியில் யுஜிசி வெளியிட்ட இறுதி வரைவு மூலம் மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. அதன் 10-ஆவது பகுதி இட ஒதுக்கீட்டு உரி மையை அப்பட்டமாக மீறுகிறது. தற் போது கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு நேரடி நியமனங்களில் உள்ள நிலுவை காலியிடங்கள் ‘இட ஒதுக்கீடு விலக்கத் திற்கு’ ஆளாகி பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்படாது என்ற விளக்கம் ஒன்றிய கல்வி அமைச்சகம், யு.ஜி.சி ஆகியவற்றின் டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் மட்டும் போதாது.
எப்போது வேண்டுமானாலும் இட ஒதுக்கீட்டைப் பறிக்கலாம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை நிறைவேற்றவே அது பயன்படும். நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டத்தின் மூலமே இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட துறை இடஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வகையில் அறி விப்பை வெளியிடுவது சட்ட விரோதமானதாகும். எனவே, 2023 இறுதியில் யுஜிசி இறுதி வரைவின் குறிப்பிட்ட பகுதி (X) திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவிக்க வேண்டும். மேலும் உடனடியாக எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங் களை நிரப்ப சிறப்பு நியம னங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சிபிஐ (எம்) வலி யுறுத்துகிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அறிவிக்கையை இதுவரை திரும்பப் பெறாத மோடி அரசு: தீஓமு கண்டனம்
யுஜிசி-யின் வரைவு அறிக்கை க்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொ துச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“பாஜக-வின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி சமூக நீதியை, இடஒதுக்கீட்டை எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு ஒழித்துக்கட்டி வருகிறது. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 80 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிற எஸ்சி-எஸ்டி, எம்பிசி, பிசி, மாணவர்களின் கல்விக் கனவுகள் மீதும், வேலைவாய்ப்பு கள் மீதும் பாஜக அரசு ஓயாத போர் தொடுத்து வருகிறது.வாய்ப்புக் கிடைக்கும் போதெல் லாம் இம்மக்கள் மீது மனுவாத விஷத்தைக் கக்குகிறது. கல்வி, வேலை வாய்ப்புகள், நிலம் போன்ற உரிமைகள் எதுவும் சாதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற மனுநீதியே பாஜவின் தாரக மந்திரம். அதன்படியே பெரு வாரியான மக்களுக்கு துரோகம் இழைக்கிற பாஜக, ‘இந்துக்க ளின் கட்சி’ என்று நாடகமாடி வருகிறது.
உண்மையில் பாஜக உயர் சாதியினரின் கட்சியே அன்றி வேறல்ல. அதன்படியே தற்போது இட ஒதுக்கீடு நிலுவைக் காலி இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்கிற படுபயங்கரமான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளி யிட்டுள்ளது. கடும் கண்டனங்கள் எழுந்தபிறகு தற்போது யுஜிசி-யின் டுவிட்டர் பக்கத்தில் மட்டும் அவ்வாறு செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. ஆனால் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் அறிவிக்கையை இதுவரைத் திரும்பப் பெறவில்லை. எனவே உடனடியாக அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும்.
மேலும் நிலுவைக் காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பதோடு இவ்வாறு இட ஒதுக்கீட்டின் மீது தொடர் தாக்குதல் தொடுக் கிற பாஜகவின் மனுவாத நட வடிக்கைகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையா கக் கண்டிக்கிறது” என்று அறிக்கையில் அவர்கள் கூறி யுள்ளனர்.