tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

தொடர் மழையால் பசு,கன்று உயிரிழப்பு

சிதம்பரம், நவ 27- சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.  இதில் செவ்வாய் முதல் தொடர் மழை பெய்து வருகிறது.  இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதன் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் சிதம்பரம் அருகே நஞ்சை மகத்து வாழ்க்கை கிராமத்தில் வசிக்கும் விவசாயி நேதாஜி சுபா சந்திரபோஸ்க்கு சொந்தமான பசு மற்றும் கன்றுகுட்டியை வீட்டுக்கு அருகே உள்ள  மாட்டு கொட்டாகையில் கட்டிவைத்துள்ளார்.  செவ்வாயன்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் பசு மாடும் கன்று குட்டியும் புதனன்றுஇறந்து விட்டது.

4வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி

பூந்தமல்லி, நவ.27- வீட்டின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக பலியானார். மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்

. இவரது மகள் ஹரிணி (14), வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். 4வது மாடியில் உள்ள கொடிக் கம்பியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்க ஹரிணி சென்றுள்ளார். அப்போது, உயரத்தில் இருந்த கம்பியில் இருந்து துணியை எடுக்க முயன்றபோது, கால் வழுக்கியதால், மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில், அவருக்கு இடுப்பு, கை, கால், எலும்பு, முறிவு ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனே ஹரிணியை மீட்டு பள்ளிக்‌‍கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், சிறுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.