வீரளூர் கூட்டுறவு சங்கத்தில் ஊழல்-முறைகேடு
விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்
திருவண்ணாமலை, மே 8- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள வீரளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள ஊழல் முறை கேடுகளை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடை பெற்றது. வீரளூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் சுய உதவி பெண்கள் குழு, மாற்றுத்திறனாளி கள் பெண்கள் குழு, மற்றும் விவசாயிகளி டம் முறைகேடு செய்த லஞ்ச ஊழல் பணத்தை திரும்ப வழங்க வேண்டும், ஊழல் குற்றம் செய்த முன்னாள் செய லாளர் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற செயலில் ஈடுபட்ட செயலாளரை பாதுகாக்கும் மாவட்ட, மாநில பதிவாளர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீரளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மே 8 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே. வெங்கடேசன் தலைமை வகித்தார்.