மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 23 - துப்புரவு துறையில் தனி யார்மயத்தை மறைமுகமாக புகுத்தும் டாட்டா வண்டி (எல்சிவி) திட்டத்தை கைவிடக் கோரி புதனன்று (ஏப்.23) ரிப்பன் மாளிகை வளாகத்தில் சென்னை மாநகராட்சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்.21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், முதல்வ ரின் தேர்தல் வாக்குறுதிப்படி என்எம்ஆர், என்யுஎல்எம், மலேரியா, சுய உதவிக்குழு - அண்டை வீட்டு குழு, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கனரக, இலகுரக மற்றும் பேட்டரி வாகனங்களை, தரமான உதிரி பாகங்களை கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும், அரசாணை (2டி) 62-ன் படி அனைத்து துறை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு திருத்திய அகவிலைப்படியை 1-4-2025 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, செங்கொடி சங்கத்தின் பொதுச் செய லாளர் பெ.சீனிவாசுலு உள்ளிட்டோர் பேசினர்.