விழுப்புரம் மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய மின் விசையில் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் சி.பழனி வழங்கினார்.
நிறுவன சமூக பொறுப்பு நிதி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை, ஜூன். 07 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய சமூக பங்களிப்பு நிதியினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் இதர அடிப்படை தேவை கட்டமைப்புகளை மேம்படுத்திட வழங்குவது குறித்து தொழில் நிறுவனத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மண்டல பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் தங்கதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன் 10 முதல் குறைதீர் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி, மே 8- மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்த காரணத்தினால் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர் முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் விலகிக் கொள்ளப்பட்டதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 10 திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் தொடர்ந்து நடைபெறும். பொது மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரடியாக வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜுன் 19 முதல் 28 வரை ஜமாபந்தி
திருவண்ணாமலை, ஜூன் 7- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 1433 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) ஜூன் 19 முதல் 28 வரை (இடையில் வரும் சனி, ஞாயிறு நீங்கலாக) நடத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மனு நீதி நாள் கூட்டம் மற்றும் கோட்ட அளவில் நடைபெறும் மாற்று திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் ஆகியன நடைபெறாது. மேலும் பொதுமக்கள் தங்களது குறை தொடர்பான மனுக்களை மேற்படி தினங்களில் தொடர்புடைய வட்டத்தில் ஜமாபந்தி நடத்தும் அலுவலர்களிடம் கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பத்திரம் காணவில்லை
காட்டுமன்னார்கோவில் வட்டம் கோபாடி செட், கீழக்கரை கிராமத்தில் வசிக்கும் முருகேசன் மகன் சேகர் ஆகிய எனக்கு அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் சொந்தாக நிலம் உள்ளது.( நில எண் 67/1-ல் 0.51.5-ல் 0.08.0 ஏர்ஸ் (20 சென்ட்) ஆவண எண் 571/2001 ) இந்த நிலத்தின் அசல் பத்திரத்தை
25.5.2024 அன்று கடலூர் மாவட்டம் குமராட்சி கடை தெருவிற்கு நகல் எடுக்க இருசக்கர வாகனத்தில் வரும் போது தொலைந்து விட்டது. இதனை கண்டு எடுத்தவர்கள் எனது தொலைபேசி எண்ணிற்கோ (அ ) முகவரிக்கோ தெரியபடுத்தவும்
இப்படிக்கு
மு.சேகர் 9751027549