tamilnadu

img

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதுயானதை அடுத்து மொத்த பாதிப்பு 145 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு பரவலாக மீண்டும்  அதிகரிக்கக் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனும் ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நேற்று பாதிப்பு 112-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 33 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது.