சென்னை:
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற் கொண்டார்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உருமாற்றம் அடைந்த வைரசா எனக்கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.