tamilnadu

img

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து

சென்னை, ஆக. 21 - 2020ஆம் ஆண்டு ஜன வரி 14 அன்று ‘துக்ளக்’ பத்திரி கையின் 51-ஆவது ஆண்டு விழாவில் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சையான கருத்துக் களைத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குரு மூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி, உயர் நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனு வை அப்போதைய அரசுத் தரப்பு தலைமை வழக்கறி ஞர் விஜய நாராயண் நிரா கரித்து உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்து க்குப் பிறகு முந்தைய உத்தர வை ரத்து செய்து, குரு மூர்த்திக்கு எதிராக அவ மதிப்பு வழக்கு தொடர அனு மதி கோரி அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர்.  சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் திரும்பப் பெற்றார். அரசு தலைமை வழக்கறி ஞர் ஆர். சண்முகசுந்தரத் தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எஸ்.குரு மூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி என். சேஷசாயி, குருமூர்த்திக்கு எதிராக அவ மதிப்பு வழக்கு தொடரும் வகையிலான, தற்போதைய அரசின் தலைமை வழக்கறி ஞர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதி ர்த்து, துரைசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதி பதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு, வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குரு மூர்த்தி பதிலளிக்க உத்தர விட்டு வழக்கை ஒத்திவைத் தார்.