குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரத்தில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.கீதா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் என்.மேகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.