tamilnadu

img

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செய்ய  பதிவாளருக்கு நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சவுக்கு இணையதளம் வாயிலாக அரசு அலுவலகங்களிலும், அதிகாரிகள் மட்டத்திலும் நடக்கும் முறைகேடுகள்  தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறார் பத்திரிகையாளர் சங்கர். இந்நிலையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் அரசு உயர் அதிகாரிகள் வீடுகளில் ஆடர்லி முறையில்  காவல்துறையினர்  சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது குறித்து  தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவில் செய்திகள் வெளியிட்டு வந்தார்.  அதேபோல் உயர் அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட சொந்த பணிகளுக்காக அரசின் வாகனங்கள்  முறைகேடாக பயன்படுத்தப்படுவது குறித்து தொடர்ச்சியாக புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டு வந்தார். மேலும் நீதிபதி ஜி.எஸ் சுவாமிநாதனின்  மகன் ­தனது சொந்த பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நீதிபதி ஜி.எஸ். சுவாமிநாதன்  தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்