இந்திய அளவிலான மல்லர் கம்ப போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
கடலூர், ஜூன் 12 - இந்திய அளவில் நடைபெற்ற மல்லர்கம்ப போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. யூனியன் பிரதேசமான டையூ வில் அண்மையில் நடந்த கேலோ இந்தியா பீச் கேம்ஸ் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரா.தீபிகா மல்லர் கம்ப விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட கேலோ இந்தியா மல்லர் கம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவர். பதக்கம் வென்ற மாணவி தீபிகாவை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் பாராட்டினார். கடலூர் மாவட்ட மல்லர் கம்ப கழகத் தலைவர் என்.ராமச்சந்திரன், துணைத் தலைவர் நல்லாசிரியர் ஜி.அசோகன், பொதுச் செயலாளர் பி.கார்த்திக், இணைச் செயலாளர் பாபு, பயிற்சியாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.