அசாம் மாநிலம், கவுஹாத்தியில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி வீராங்கனைகள் வெற்றி பெற்றதையொட்டி திங்களன்று தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றனர். உடன் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் ஜெ.மேகநாதரெட்டி, அண்ணா பல்கலை. துணைவேந்தர் கதிரேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.