tamilnadu

காங். பொறுப்பாளர் குண்டுராவுக்கு தொற்று

சென்னை:
தமிழகம், புதுவை, கோவா ஆகியவற்றின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் வருகை தந்த தினேஷ் குண்டுராவ் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அந்த சந்திப்பின் போது குண்டுராவ் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்‌. நேரு, காங்கிரஸ் எம்எல்ஏ கே. ஆர்.ராமசாமி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர். செய்தியாளர் சந்திப்பிலும் காங்கிரஸ் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும்   கலந்து கொண்டார்.