சென்னை, ஏப்.24- தில்லி, ஜவஹர் பவனில் உள்ள சமாஜிக் நியாய சம்மேள னத்தில் சம்ருதா பாரத் அறக்கட் டளை சார்பில் மாநாடு நடை பெற்று வருகிறது. இந்த மாநாட் டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
சமூக நீதியை நிலைநாட்டும் தமிழகம்!
இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக் கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்பு களை தெரிவித்து வருகிறது. 50 விழுக்காடு இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக தமிழ்நாட்டில் தற் போது ஓபிசி, எஸ்சி, எஸ்டி உள் ளிட்டோருக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருவது குறிப் பிடத்தக்கது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனு மதிக்கப்பட்ட வர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளி களைச் சேர்ந்த மாணவர்களுக் கான தொழில்முறை படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அண் மையில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண் டும் என்று ஒன்றிய அரசை வலி யுறுத்தி தமிழக சட்டப்பேரவை யில் சமீபத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்த லுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கி றது. ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி-யினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வர விருக்கும் அரசாங்கம் ஆர்வத்து டன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.