tamilnadu

img

தமிழக கல்வி நிலையங்களில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு மாணவர் சங்கம் கோரிக்கை

சென்னை, அக். 5 - தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலை யங்களில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வலியுறுத்தி சனிக்கிழ மையன்று (அக்.5) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் இந்நிகழ்வை நடத்தியது.

மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான பிரகடனத்தை வெளியிட்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த சாமி  பேசுகையில், “கருத்துச் சுதந்திரத்தை யும், ஜனநாயகத்தின் உயரிய பண்பு களையும் இளம் தலைமுறையினரிடம் வளர்க்கும் வகையில்  கல்வி வளாகங்களில்   மாணவர் பேரவைகள் செயல்படுகின்றன. இத்தகைய ஜனநாயக நடைமுறை தமிழ்நாட்டில் மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தனியார் ஆதிக்கம் மேலோங்கிய பிறகு மாணவர் பேரவை தேர்தல் நடத்துவதை ஆட்சியாளர்கள் கைவிட்டனர். மாணவர் பேரவை தேர்தலை நடத்தக் கோரி தொடர் போராட்டங்களை இந்திய மாணவர் சங்கம் நடத்தி வருகிறது. தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் பேர வைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் தேர்தலை நடத்த வேண்டும். பேரவை தேர்தலை நடத்த ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட லிண்டோ ஆணையம் பரிந்து ரைத்துள்ளது. தமிழ்நாட்டு மாண வர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க, கால் நூற்றாண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அனைத்து கல்லூரி மாணவர் பேரவை தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாநி லத் தலைவர் தௌ.சம்சீர் அகமது தலைமை தாங்கினார்.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேரா.சுரஜித் மஜூம்தார், சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சாணு, கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகி யோர் கருத்துரையாற்றினர். சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் சி.மிருதுளா, மாநில நிர்வாகிகள் தே. சரவணன், பா.ஆனந்த், இரா.பாரதி, ஜி.கே.மோகன் உள்ளிட்டோர் பேசினர்.