அச்சுதானந்தன் மறைவுக்கு கடலூரில் இரங்கல்
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான அச்சுதானந்தன் மறைவுக்கு சிபிஎம் சார்பில் இரங்கல் கூட்டம் கடலூர் ஜவான் பவன் அருகில் மூத்தத் தலைவர் எம்.மருதவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி. சுப்பராயன், ரவிச்சந்திரன், ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பழனிவேலு, ஆளவந்தார், பக்கிரான், வெங்கடேசன், செளமியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.