tamilnadu

img

பணியிடங்களை அழிக்கும் அரசாணையை கண்டித்து மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 28 - 64 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியிடங்களை அழிக்கும் அரசாணைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 28)  மாநிலம் முழுவதும் 58 மையங்களில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக அளித்த வாக்குறுதிப்படி காலிப் பணியிடங்களை நிரப்ப வில்லை. ஒப்பந்த ஊழியர்களை கூட நிரந்தரம் செய்ய மறுக் கிறது. அரசாணை 100ன்படி மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், மின்வாரியத்தை மேலும் பிரிக்க வகைச் செய்யும் அர சாணைகளை திரும்ப பெற வேண்டும்,

ரூ.5 லட்சம்பணிக்கொடை வழங்கப்படும் என்ற அரசாணையை செயல்படுத்த வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியசென்னை கிளைத் தலை வர் வி.சீனிவாசன் தலைமை தாங்கி னார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைத் தலைவர் எம்.தயாளன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கவுரி, ரவி, கிளை பொருளாளர் முருக வேல் உள்ளிட்டோர் பேசினர்.

கே.கே.நகர் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை தெற்கு கிளை-1ன் தலைவர் வி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், சென்னை-2 தலைவர் தண்ட பாணி, செயலாளர்கள் பண்டாரம் பிள்ளை (கிளை 1), கவுதமன் (கிளை 2), மாநில மகளிர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பா ளர் விஜயலட்சுமி, செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் பேசினர்.

திருமங்கலம்

திருமங்கலம் செயற்பொறி யாளர் அலுவலகத்தில்  தலைவர் எஸ்.தசரதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன்,  மேற்கு கிளை செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், நிர்வாகிகள் ஜி.குப்பன், சி.அஜிகுமார் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

சென்னை வடக்கு கிளையின் சார்பில் தண்டையார் பேட்டையில் தலைவர் பி.கதிரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆர்.ரவிக்குமார், துணைத்தலைவர் எம்.சாலட், கிளை செயலாளர் டி.சந்திரசேகர், நிர்வாகிகள் டி.மதன கோபால், ஜி.சத்யமூர்த்தி, எல்.அந்தோணியம்மாள், ஸ்டாலின், கே.திருநீர்செல்வம், ஆர்.அருள்நாதன், ஜெயக்குமார், சத்திய பானு, ஜெகந்நாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

அத்திப்பட்டு

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலைய வாயிலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.   கிளைத் தலைவர் ஜி.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் இ.ஜெயவேலு, வெங்கடேசன், சலில்குமார், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.