tamilnadu

நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு!திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம்

 சென்னை, ஆக. 16 - திமுக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம், சென்னை அண்ணா  அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16) அன்று நடைபெற்றது

திமுக தலைவரும், முத லமைச்சருமான மு.க. ஸ்டா லின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் க. துரை முருகன் முன்னிலை வகித்தார். 

கே.என். நேரு, ஐ. பெரிய சாமி, எ.வ. வேலு, க. பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கனிமொழி, ஆ. ராசா மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

நூல் வெளியீடு

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள “தென்  திசையின் தீர்ப்பு” என்ற நூல், வெளி யிடப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளி யிட, பொருளாளர் டி.ஆர். பாலு  பெற்றுக் கொண்டார். மக்கள வைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி குறித்து புத்த கத்தில் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கான நிதி பகிர்வில் வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் Infograph என அனைத்தும், இந்நூலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.