tamilnadu

img

தோழர் விபிசி நினைவு கேரம் போட்டி

சென்னை, ஜூலை 29- தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி பகத்சிங் விளை யாட்டு மன்றம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டி  சிஐடியு சார்பில் நிர்மல் பள்ளியில் நடை பெற்றது.

சென்னை வடக்கு மாவட்ட கல்வி அலுவலர் இ.முருகன், சென்னை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி.செங்கதிர் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்கள் பிரிவில் கன்னட சங்க மேல்நிலைப் பள்ளியும், பெண் கள் பிரிவில் நிர்மல் உயர்நிலைப் பள்ளி யும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  வென்றது.

இதில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு பள்ளியின் செயலாளர், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.  இதில் பள்ளிக்குழு தலைவர் கு.பூபா லன், என்.நாராயணன்,. வி.டில்லி பாபு, தலைமையாசிரியர்கள்எ.டயானா ஜூலியட், டி.ஷீலா நவரோஜி, டிஆர்இயு செயல் தலைவர் ஜானகி ராமன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பா.ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.