tamilnadu

img

தோழர் சுந்தரம் காலமானார்

சென்னை, மே 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், மாதவரம் பொன்னியம்மன்மேடு கட்சி கிளை முன்னோடியுமான தோழர் டி.சி.சுந்தரம் திங்களன்று (மே 28) காலமானார். அவருக்கு வயது 80.பெரம்பூர், மாதவரம் பகுதிகளில் 1980களில் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இவருக்கு நளினி என்ற மனைவியும் 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவரதுமகன் விஜயன் தையல் தொழிலாளர் சங்கத்தில் செயலாற்றி வருகிறார். இவரின் குடும்ப உறுப்பினர்கள் இயக்கத்தின் ஆதரவாளர்கள்.கொடுங்கையூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், ராமகிருஷ்ணன், பெரம்பூர் பகுதிச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்சசி செவ்வாயன்று (மே 28) கொடுங்கையூர் மயானத்தில் நடைபெற்றது.