தோழர் ஆர்.சீனிவாசன் உடல் தகனம்
சென்னை, ஜூன் 14- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.சீனிவாசன் (66) உடல் வெள்ளியன்று (ஜூன் 13) புழுதிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின் தேசிய நிதிச் செயலாளராக பணி யாற்றி வந்த தோழர் ஆர்.சீனிவாசன் புதனன்று (ஜூன் 11) மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம் மூத்த தலைவர் பா.சுந்தரராஜன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), ஜி. செல்வா (மத்தியசென்னை), சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், பொதுச் செயலாளர் மு.சீனிவாசன், பொருளாளர் சா.டானியல் ஜெயசிங், முன்னாள் மாநில நிர்வாகிகள் ஞான குரு, க.ராஜ்குமார், மு.அன்பரசு, தங்கராஜ், இளங்கோ, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலை வர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.