tamilnadu

img

தோழர் மோளிப்பள்ளி வி.ராமசாமி நூற்றாண்டு விழா

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், திருச்செங்கோடு  சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் மோளிப்பள்ளி வி.ராமசாமியின் நூற்றாண்டு விழா செவ்வாயன்று நாமக்கல் மாவட்டத்தில் எழுச்சியோடு துவங்கியது. முன்னதாக, திருச்செங்கோட்டில் நடைபெற்ற துவக்க விழாவில், நூற்றாண்டு விழா மலரை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, டி.ரவீந்திரன், செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கந்தசாமி (நாமக்கல்), ஆர்.ரகுராமன் (ஈரோடு), மேவை.சண்முகராஜா (சேலம்) மற்றும் மூத்த தலைவர் ஆர்.சிங்காரவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.