தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் மு.சுப்பிரமணியனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்திரவிட்டுள்ள கரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரின் எதேச்சதிகாரபோக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கண் மருத்துவ சங்க நிர்வாகி சிறீராம் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முகமது உசேன் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, விக்டர் சுரேஷ்குமார் கண்டன உரையாற்றினர்.