தோழர் சீனிவாசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
கள்ளக்குறிச்சி, ஜூன் 28- கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருநாவலூர் துணை மின்நிலையத்தில் இளமின் பொறி யாளரகா பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கள்ளக்குறிச்சி தலைவர் கே.சீனி வாசனுக்கு உளுந்தூர்பேட்டையில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பாராட்டி பேசுகையில், “மின் ஊழியர் மத்திய அமைப்பில் சிறப்பாக பணியாற்றியதோடு, கடைநிலை ஊழி யர்களிடம் எளிமையாக பழகுவதும், ஊழி யர்களைப் பாதுகாப்பதில் சிறந்த தலை வராக செயல்பட்டவர் சீனிவாசன். உங்கள் தொழிற்சங்க பணி மேன்மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “மின் துறையைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய முக்கிய கடமை என்பதால் களத்தில் இறங்கிப் போராடி வருகிறோம். மக்கள் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் கார்ப்பரேட்டுகளுக்குத் துணையாக நிற்கின்ற மக்கள் விரோத மோடி அரசு மின்சார வாரியத்தை முழுவது மாகத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நிலைமையைத் தடுத்து நிறுத்தப் போராட வேண்டியிருக்கின்றது” என்று தெரி வித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் ஆர்.சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செய லாளர் டி.பழனிவேல், மாநிலச் செயலாளர் கே.காங்கேயன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் கே.சலீம் நன்றி கூறினார். ஏற்புரை வழங்கிய சீனிவாசன்,“ நிர்மல் பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம், கடலூரில் நடை பெற உள்ள மாநில மாநாட்டிற்கு ரூ.10 ஆயிரம் , கள்ளக்குறிச்சி கிளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.