tamilnadu

img

தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரரும், பெண்ணுரிமைப் போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மூத்த தோழர் கே.வி.எஸ். இந்துராஜ், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, புறநகர் மாவட்டச் செயலாளர் கோமதி, வாலிபர், மாணவர் சங்கத்தினர், டி.ஆர்.இ.யு.வினர் கலந்து கொண்டனர்.  முன்னதாக தோழர் பாப்பா உமாநாத் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.