tamilnadu

சளி, காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை, மே 7- பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று  சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு  சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி யுள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் வியாழனன்று (மே 7) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கொரோனோ நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாவதால் மக்கள் அச்சமடைய தேவை யில்லை. களப்பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றனர். விரைவில் மிக நல்ல செய்தி கிடைக்கும். மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனோவால் தனிமைப்ப டுத்தப்பட்டவர்களை ஒதுக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது.

பாதிக்கப்பட்டவர்களில் 99 விழுக்காடு பேர் குணமாகி வருகின்றனர். எனவே, கொரோனோ குறித்து அச்சம் தேவை யில்லை. எய்ட்ஸ், சிகா வைரஸ் போன்ற வற்றை வென்றுள்ளோம். கை கழுவுதல், முகக்கவசம் என வாழ்வு முறைகளை மாற்றிக்  கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்க ளின் இறப்பு விகிதம் 0.9 என்ற அளவில்தான்  உள்ளது. முதியவர்கள், சர்க்கரை நோயாளி களை தனிக்கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்களில் பெரும்பாலானோர் நன்றாக உள்ளனர். தொற்று அறிகுறியே இல்லாதவர்களை நந்தம்பாக்கம் வர்த்தக மையம், லயோலா கல்லூரிகளில் வைத்து  சிகிச்சை அளிக்கப்படுகிறது. கட்டுப்படுத் தப்பட்ட பகுதியில் நடமாடும் ஏடிஎம் அமை யங்கள் அமைக்கவும், மருந்து, மாத்திரை கள் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்,