tamilnadu

சென்னை பல்கலைக் கழக வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை,பிப்.11- சென்னை பல்கலைக்கழக வங்கிக்  கணக்குளை முடக்கம் செய்த நடவடிக்கை யை வருமான வரித்துறை திரும்ப பெற  வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கல்லூரி  ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-

சென்னை பல்கலைக்கழகம் ரூ.424 கோடி  வரி நிலுவை வைத்திருப்பதாக கூறி, வருமான வரித்துறை அதன் 37 கணக்கு களை முடக்கி இருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 50 விழுக் காட்டுக்கும் மேல் அரசின் நிதியை பெற்று வந்த சென்னை பல்கலைக்கழகம், தணிக்கை  துறையின் ஆட்சேபணைகளை சரி செய்யாத காரணத்தால் உரிய நிதியை அரசிடமிருந்து  பெற இயலவில்லை.

எனவே, இப்பல் கலைக்கழகம் தனது செயல்பாட்டிற்கு 50 விழுக்காட்டுக்கும் மேல் சொந்த நிதியை உரு வாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக அரசின் பங்களிப்பு இருப்பதாக கூறி, ஏற்கனவே வழங்கி  வந்த வருமான வரி விலக்கு ரத்து  செய்ததால் ரூ. 424 கோடி வரி பாக்கி ஏற்பட் டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிதியை அரசு வழங்கலாம். வங்கிக் கணக்கு முடக்கத்தால், அரசு பல்கலைக் கழகத்தின் அன்றாட செயல்பாடுகள் முடங்கியதால் ஆசிரி யர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்,  மாணவர்கள் என்று அனைவருக்கும் பாதிப்பு  ஏற்படும்.

இதை தவிர்ப்பதற்கு வங்கிக் கணக்கு முடக்கம் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். இதில்,  தமிழ்நாடு அரசு தலை யிட்டு , சென்னை பல்கலைக் கழகத்தின் அன்றாட நிதி பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.