சென்னை:
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா அமைப்பின் தலைவர் பாஷா கடந்த 20 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி பாஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இதையடுத்து, பாஷாவுக்கு பரோல் கோரிய விண்ணப்பத்தை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.