சென்னை, ஜூன் 27- கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவிக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 27) தலைமைச் செயலகத்தில் அத்துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ-விடம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர். இது தொடர்பாக தமிழ் நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களின் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ. கிருஷ்ணமூர்த்தி, பி. பக்தவச் சலம், ஏ. சிவக்குமார் (சிஐடியு), சு. பத்மநாபன் (தொமுச) ஆகியோர் அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரி 2018 மார்ச் மாதம் முதல் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மண்டல மாநாடுகள் என தொடர் போராட்டங்களை கூட்ட மைப்பு நடத்தியது. இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தமும் நடைபெற்றது. இதனையடுத்து தொடர் பேச்சுவார்த்தை நடை பெற்றது. 2018 செப்டம்பர் 7 ஆம் தேதி அமைச்சர் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஊதிய உயர்வு தொடர்பாக சீர மைப்பு குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டு, குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 2018 டிசம்பர் 31 ஆம் தேதி தமிழக அரசுக்கு வழங்கி யது. அதன்படி, அரசு ஊதிய உயர்வு தொடர்பான அறி விப்பை வெளியிடாமல் உள் ளது. எனவே, ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய லாளரிடமும் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.