tamilnadu

img

“சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தீண்டாமை ஒழிப்பு உறுதியேற்போம்!”

சென்னை, ஏப்.13- 2021-இல் தமிழ்நாட்டில் ஆட்  சிக்கு வந்த திமுக அரசு அறிவித்த படி, ஒவ்வோராண்டும் அம்பேத்கர் பிறந்த நாள், ‘சமத்துவ நாளாக’ அரசு  சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது.

அதன்படி டாக்டர் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்த நாள், நாடு முழு வதும் இன்று கொண்டாடப்பட உள்ள  நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின்  வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள் ளார்.

“அண்ணல் அம்பேத்கர் அவர் கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மராட்டிய மாநிலத்தில் பிறந்த வர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெ ரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார்.  உயர் கல்விக்காக வெளிநாட்டுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு.

தீண்டாமைக்கு  எதிரான குரல்...
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த  சாதி காரணமாக இழைக்கப் பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவ மானத்திற்கும் ஆளானவர். அதன்  காரணமாக, தீண்டாமைக் கொடுமை யை எதிர்த்து கடுமையாகப் போராடி யவர். பல்லாயிரக் கணக்கானவர் களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.

முதலாவது அமைச்சர்...
பொருளாதாரம், அரசியல், வர லாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறை களில் சிறந்து விளங்கியவர். ஆசிரி யர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். இந்திய அர சியலமைப்பு சாசனத்தின் வரை வுக்குழு தலைவராக விளங்கிய மிகப்  பெரிய சட்டமேதை அம்பேத்கர். நாடு  சுதந்திரமடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்  தவர்.

புகழ் சேர்க்கும் தமிழக அரசு!
அண்ணல் அம்பேத்கரின் புக ழைப் போற்றும் வகையில் வியாசர்  பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி  என்றும், சென்னை சட்டக் கல்லூ ரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழ கம் என்றும் பெயர் சூட்டியதுடன்,  சென்னை ராஜா அண்ணாமலைபுரத் தில் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கர் அவர்களைப் போற்றியுள்ளது தமி ழக அரசு.

சாதி - சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக  விளங்கும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14 ஆம்  நாளை, “சமத்துவ நாள்” என அறி வித்துள்ளோம். அந்நாளில் தமிழ் நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்! அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி  அவர் வழியில் சமத்துவ சமுதா யத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் !”

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.