tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘மக்களுடன் முதல்வர் திட்டம்’
ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, ஜூலை 27- பொதுமக்களின் கோரிக்கை மனுக்  களுக்கு விரைவில் தீர்வு காணும் வகை யில் ‘மக்களுடன் முதல்வர்’என்ற புதிய  திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கோவை யில் தொடங்கி வைத்தார். முதற்கட்ட மாக 2,058 முகாம்கள் மூலம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில், மக்களுடன் முதல் வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்  பாடுகள் குறித்து 5 மாவட்ட ஆட்சி யர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சனிக்கிழமையன்று (ஜூலை 27) ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்  தில் மதுரை, தூத்துக்குடி, நாகை, வேலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக அரசின் முக்கிய அதி காரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோ சனைக் கூட்டத்தில், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முழுக்கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

ஈரோடு, ஜூலை 27- தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை விளங்குகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி  கொள்ளளவும் கொண்டதாகும். பவானி சாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்  பகுதி மற்றும் வடகேரளாவில் தொடர்ச்சி யாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை  நீர்வரத்து 14,127 கன அடியாக அதிகரித்  துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம்  வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் 87.54 அடியாகவும், நீர் இருப்பு 20 டிஎம்சி  ஆகவும் உள்ளது. 

அணையின் நீர்மட்டம் வேகமாக  உயர்ந்து வருவதால், விரைவில் அணை  முழு கொள்ளளவை எட்டும் என எதிர்  பார்க்கப்படுகிறது.

ஓசூரில் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒப்புதல்

ஓசூர், ஜூலை 27- ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து  ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய  ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய விமான நிலைய ஆணை யம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை 
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை,ஜூலை 27-  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின்  கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்  பணிகளை விரைந்து முடிக்க அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு கின்றன என்று சென்னை உயர் நீதிமன் றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசின் நிர் பயா நிதியை முழுமையாகப் பெற்று பயன்படுத்த ஏதுவாக உயர் மட்ட அதி காரம் உள்ள குழுவை நியமிக்க கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறி ஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்  பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நிர்  பயா நிதி மூலம் தமிழகத்தில் காவல்  நிலையங்களில் பெண்கள் ஆதரவு  பிரிவை அமைத்து வலுப்படுத்தப்பட்டுள் ளது. காவல்துறையில் புதிதாக 13 ஆள்  கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள் ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த 19 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான சைபர் குற்றம் தடுப்பு திட்டம், சைபர் தடயவியல் ஆய்வகங்களுக்கு கருவி கள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட திட்டங்களுக்கு நிர்பயா நிதி பயன் படுத்தப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்  பணிகளை விரைந்து முடிக்க அனைத்து  நடவடிக்கைகளையும் தமிழக அரசு  எடுத்து வருகிறது,” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அறிக்கையை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ண குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு ஏற்றுக்கொண்டு,  வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டது.

சிஐடியு செவ்வஞ்சலி

சென்னை, ஜூலை 27- சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:

சிஐடியு வடசென்னை மாவட்ட செயலா ளர் தோழர் லெனின் சுந்தர் திடீரென உயி ரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்..

சிம்சன் நிறுவனத்தில் நிர்வாக ஊழிய ராக பணியில் சேர்ந்தார். அப்போதும்  கிடைக்  கும் நேரங்களில் இயக்கப்பணிகளில் தோழர்  களுடன் இணைந்து செயலாற்றியவர்.

தொழிற்சங்க பணியில் தன்னை இணைந்து கொண்ட தோழர்.லெனின்சுந்  தர்  அம்பத்தூர் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனி யனின் தலைவராக, பொதுச்செயலாளராக செயல்பட்டு, அதனை தொடர்ந்து சிஐடியு வடசென்னை மாவட்ட செயலாளராக, சிஐ டியு மாநில நிர்வாகக்குழு உறுப்பினராக என  30 ஆண்டு காலத்திற்கு மேலாக தொழிலாளி  வர்க்க உணர்வுடன் செயல்பட்டவர்.

தோழர்.லெனின் சுந்தரின் மறைவு வட சென்னை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, மாநி லக்குழுவிற்கும் பேரழிப்பாகும். அவரது மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலியை செலுத்துகிறது.

அவரை பிரிந்து வாடும் மனைவி, மகள்,  மகன் மற்றும் குடும்பத்தினருக்கும், தோழர்  களுக்கும் சிஐடியு மாநிலக்குழு சார்பில்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.