கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஸ்ஐடி விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் போலி என்.சி.சி பயிற்சி முகாமில், 13-வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை தலைவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்திடவும், சமூக நலத்துறை செயலாளரின் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.