சென்னை, செப்.7- உலகின் மிகப் பெரிய வங்கியான பிஎன்ஒய் மெலன் வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்தி லான பயிற்சி மையம் உள்ளிட் டவை அமைக்கும் வகையில் புதிய முதலீடுகளை மேற் கொள்ள தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
தமிழக அரசின் பல்வேறு முன்னெடுப்புகள் உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
படித்த திறன்மிகு இளை ஞர்களுக்கு அதிக எண்ணிக்கை யிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மாநி லத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் மு.க ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.
இப்பயணத்தில் சிகாகோ வில் பிஎன்ஒய் மெலன் (¡õNY MELLON) வங்கியின் உயர் அலு வலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த பிஎன்ஒய் மெலன் வங்கி உல கின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி பாது காப்புக்காக உருவாக்கப் பட்டதாகும்.
நியூயார்க் நகரை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கிக்கு இந்தி யாவில் பல கிளைகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவை மேம் படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்தவும் திட்ட மிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம் படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிஎன்ஒய் மெலன் வங்கி தனது 6 முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந் தெடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கணினி பொறியி யல் படித்த மாணவர்கள் உள்ள தால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைக்கவும், தரவுகளை பகுப் பாய்வு செய்யவும் மென்பொ ருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம் படுத்தவும் திட்டமிடப்பட் டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஒய் மெலன் வங்கியின் துணை தலைவர் செந்தில் குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழி காட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அரசு கோப்புகளில் கையெழுத்து!
இதற்கிடையில் அமெரிக்கா வில் இருந்த படியே இ-ஆபீஸ் வழியாக அரசு கோப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவற்றில் கையெ ழுத்திட்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும் அரசுக் கோப்புகள் தேங்கிவிடாமல் மின் அலுவலகம் வழியாக பணி தொடர்கிறது,” என்று தெரி வித்துள்ளார்.