சோழர் கால சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு!
கடலூர், அக். 6- பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி தென் பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வின் போது சோழர் கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்க ப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பைத் தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற கள ஆய்வு மேற் கொண்டார். அப்போது பூமியின் மேற்பரப்பில் சோழர் காலத்தைச் சார்ந்த இரண்டு கருப்பு நிற சுடுமண் உருவ பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் பொம்மை களின் உயரம் 5 செண்டி மீட்டர் அளவைக் கொண்ட தாக உள்ளது. சுடுமண் பொம்மையின் முகம் ஆந்தை பறவையின் முகம் போன்று தோற்ற மளிப்பதாகவும், கடந்த 1995-96 இல் விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லி யல் துறை நடத்திய அகழ் வாராய்ச்சியில் இது போன்று சுடுமண் பொம்மை கள் கண்டெடுக்கப்பட்டுள்ள தாகவும், அதேபோன்று தற்போது பைத்தம்பாடி தென்பெண்ணை ஆற்றிலும் சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதே காலத்தைச் சேர்ந்த மக்கள் தென்பெண்ணை கரையோர பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர் என அறிய முடிகிறது என்றும், தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் வெள்ளப் ப்பெருக்கு ஏற்பட்டதால் மண்ணரிப்பின் காரணமாக மண்ணுக்கு அடியில் மறை ந்திருந்த தொல்பொருட்கள் பூமியின் மேற்பரப்பில் வந்தி ருக்கலாம் எனவும் தொல்லி யல் ஆய்வாளர் இமானு வேல் தெரிவித்துள்ளார்.
