சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட நபர் கைது
சென்னை, டிச. 10- சமூக வலைத்தளங்களில் குழந்தைக ளின் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 4ஆம் தேதி மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்களிலும், Signal App என்ற செல்போன் செயலியிலும், ஒரு குறிப்பிட்ட நபர் குழுக்களை ஆரம்பித்து அதில் குழந்தை களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், மேலும், அக்குழுவில் உள்ள மற்ற நபர்கள் மேற்படி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கண்ட நபரின் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வற்றின் ID, Account Creator மற்றும் IPDR விவரங்களை கொண்டு விசாரணை செய்ததில், எதிரி தெலங்கானா மாநிலத்தில் உள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தெலங்கானா மாநிலம் சென்று, அங்கு பதுங்கியிருந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வெங்கா ரகுநாத் ரெட்டி விசாரணைக்குப் பின்னர், திங்களன்று (டிச. 9) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வரத்து அதிகரிப்பால் கோயம்பேட்டில் ஒரே நாளில் குறைந்த காய்கறிகள் விலை
சென்னை, டிச. 10- கோயம்பேட்டில் திங்கட்கிழமை ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், ஒரே நாளில் ரூ.100 சரிந்து ரூ.300 செவ்வாயன்று விற்பனை செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழையின் காரண மாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்த நிலை யில், தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு ரூ.10 முதல் 100 வரை குறைந்துள்ளது.
தக்காளியின் விலை திங்களன்று ரூ.50 முதல் 60க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாயன்று ரூ.20 முதல் 30 குறைத்து விற்பனை செய்யப்பட்டது. அதே போல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த முருங்கைக்காயின் விலை, வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒரே நாளில் 100 ரூபாய் குறைந்துள்ளது.
மேலும் உச்சத்தில் இருந்த பூண்டின் விலையும் கிலோவுக்கு ரூ.50 குறைந்து 400க்கு விற்பனை செய்யப்பட்ட்டது. கடத்த சில நாட்களாக தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த காய்கறிகளின் விலை தற்போது குறைய தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் ஒரே நாளில் காய்கறிகளின் விலை குறைந்ததால், விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரி வித்துள்ளனர்.
வார நாட்களில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்
சென்னை, டிச.10- சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த டிச.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இதற்கான மாற்று அட்டவணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், அனைத்து நாள்களிலும் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சில ஊடங்களில் தவறுதலாக செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த மாற்று அட்டவணை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி
அம்பத்தூர், டிச. 10 - மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பிரதான சாலையில் வசிப்பவர் அருண் பிரசாத். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள். இதில் பிறந்து 9 மாதம் ஆன இரண்டாவது மகன் அகிலனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பின்னர் காய்ச்சல் குறையாததால் மீண்டும் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் அங்கு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் போருரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, குழந்தை உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 9 மாத குழந்தை காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை, டிச. 10- கார்த்திகை தீப ஒளி விழாவையொட்டி திருவண்ணா மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீப ஒளி விழாவின் ஒரு பகுதியாக மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி வருகிற 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
அதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
முதல் ரயில் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.15 மணியளவில் விழுப்புரம் ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் ஜங்சனுக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும். அதேபோல் மற்றொரு ரயில் விழுப்புரம் ஜங்ஷனிலிருந்து 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும்.
பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த நேர அடிப்படையில் 15ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மற்றொரு சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து 13ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதியம் 1.25 மணிக்கு வந்தடையும்.
பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். அதனை தொடர்ந்து அந்த ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 14ஆம் தேதி அதிகாலை 7.20 மணிக்கு திருச்சியை சென்றடையும் இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘ஐக்யூஓஓ 13’ நாளை முதல் விற்பனை
சென்னை, டிச.10- ‘ஐக்யூஓஓ 13’ புதிய நவீன செல்பேசி விற்பனை புதன்கிழமை பகல் 12 மணிக்கு அமேசான்.இன் மற்றும் ஐக்யூஓஓ இ-ஸ்டோரில் துவங்குகிறது
- எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ.3 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனசுடன் 9 மாதங்கள் வரை வட்டியில்லா தவணைமுறை வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விவோ பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகள் உலகளாவிய சந்தைகளை சீர்குலைக்கலாம்
சென்னை, டிச.10- அமெரிக்க அதிபராக அடுத்தமாதம் பொறுப்பேற்க உள்ள டெனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் நிதிச் சீர்திருத்தங்கள் உலகளாவிய சந்தைகளை சீர்குலைக்கலாம் என்று 2025-ஆம் ஆண்டிற்கான சந்தைக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள கோடக் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் ஆண்டில் கவனிக்கக் கூடிய பங்குகள், அடிப்படை விற்பனைப் பொருட்கள் மற்றும் பண மதிப்பு குறித்த பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் மேலாண் இயக்கு னர் ஸ்ரீபால் ஷா கூறுகையில், இந்தியா வின் நீண்ட கால வளர்ச்சித் திறன் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் அதே வேளையில், எச்சரிக்கை உணர்வுடன் சந்தையை அணுகுமாறு முதலீட்டாளர்களை அறிவுறுத்துகிறோம் என்றார்.
உள்நாட்டில், பணவீக்கம் அதிக மாகவே உள்ளது, குறிப்பாக உணவு விலை அதிகமாக உள்ளது. பணவீக்கம் இலக்கைவிட அதிகமாக இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் திடீர் வீழ்ச்சி காரணமாக பிப்ரவரியில் அறிவிக்கப்பட இருக்கும் நிதிக் கொள்கை யின்போது வட்டி விகிதக் குறைப்பு இருக்கலாம். 2025க்குள் செல்லும்போது புவிசார் அரசியல் மாற்றங்கள், பொருளாதாரக் கொள்கைகள் அதனால் கிடைக்கும் ஆதாயங்களைக் குறைக்கலாம் என்றாலும்கூட, தங்கமும் வெள்ளியும் அவற்றின் வலிமையைத் தக்கவைத்துக் கொள்ளும்.
மத்திய கிழக்கு, ரஷ்யா-உக்ரைன் மோதலில் உருவாகும் தொடர்ச்சி யான பதற்றங்கள் கச்சா எண்ணை விலையை உயர்த்தும். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். 2025இல் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் நிதிச் சீர்திருத்தங்கள் உலகளாவிய சந்தைகளை சீர்குலைக்கலாம் என்பதால், டாலரின் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியின் பணம் குறித்த நிலைப்பாடு நாணயத்தின் பாதையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 86/87.00 அளவுக்கு போகலாம் என அந்த கண்ணோட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் அறிமுகம்
சென்னை, டிச.10- நவீன வாழ்க்கை முறைகளின் வளர்ந்து வரும் சிக்கல்கள், அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் எதிர்பாராத அவசர நிலைகளை நிவர்த்தி செய்ய சூப்பர் ஸ்டார் எனும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராய் கூறியதாவது: "சூப்பர் ஸ்டார் திட்டத்தில் சேரும் ஒருநபர் திருமணத்திற்கு பிறகு தனது மனைவியையும் பின்னர் குழந்தைகள் பிறந்தால் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளமுடியும். இதற்காக கூடுதல் பிரீமியம் கட்டத் தேவையில்லை.
தமிழ கத்தில் 600க்கும் மேற்பட்ட முன்னணி மருத்துவமனைகளிலும் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலும் ரெக்கமில்லா மருத்துவ சேவையை பெறமுடியும். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப ஒருநாள் முன்னதாக அனைத்து கட்டணங்களும் செலுத்தப்படும். மக்களுக்கு ஏற்படக்கூடிய புதிய புதிய பாதிப்புகளையும் உள்ளடக்கி இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.