குழந்தைகள் பாதுகாப்பு, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி ஞாயிறன்று (பிப்.23) பாலர் பூங்கா சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தங்களின் உரிமைகளையும், தேவைகளையும் முழங்கியபடி குழந்தைகள் நடத்திய நடை பயணத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம், தென்சென்னை ஒருங்கிணைப்பாளர் கே.வனஜகுமாரி, வடசென்னை ஒருங்கிணைப்பாளர் பவாணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா உள்ளிட்டோர் பேசினர்.