tamilnadu

img

மலைகிராமங்களில் தொடரும் குழந்தை திருமணம்

கிருஷ்ணகிரி, ஜூன் 24- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 7 வது மாநாடு காவேரிப்  பட்டிணத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் ரவி தலைமை  தாங்கினார். கிளைத் தலை வர் சித்ரா வரவேற்றார். மாநிலச் செயலாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் வேலை அறிக்கையை வாசித்தார். “மாற்றத்திற்கான அறிவியல்” குறித்து மாநிலச் செயலாளர் முனைவர் சேதுராமன், மாநில கருத்தாளர் ஜெயமுருகன் ஆகியோர்  பேசினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். மக்கள் வாழ்வு, முன்னேற்றத்திற்கு  அடிப்  படைத் தேவைகளில் ஒன்றான கல்வியில் அடுத்த கால் நூற்றாண்டுக்கு தாக்கத்தை உரு வாக்கும்  கல்விக் கொள்கை வரைவினை  இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கருத்துக்  கூறுவதற்கு ஏதுவாக  மத்திய அரசு அறிக் கையை உடனடியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும், சாலை ஓரங்களிலும் உள்ள அரிய  வகை மரங்களை முறையாக கணக்கெடுத்து பராமரிக்க வேண்டும், மரங்கள் வெட்டப்  படுதை கண்கானித்து தடுத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும், மலை கிரா மங்களில் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்தவும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதி யாக ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் வித மாக அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக சர்ஜான், செய லாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக பாரதிராஜா நிர்வாகிகளாக தேர்வு செய் யப்பட்டனர்.