tamilnadu

img

ஊதிய நிலுவை கேட்டு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்  

சென்னை, ஜன. 11- தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட தொழி லாளர்கள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல  வாரிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று (ஜன. 11) நடைபெற்றது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் ்செயலாளர் ஜி.சுகுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா பரவலை காரணம் காட்டி தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவ லர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்க வில்லை. 50 வயதிற்கு மேற்பட்ட திட்ட பணி யாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் செயல்படும் 213 மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும்,  பிப்ரவரி 22, 23 தேதிகளில் நடக்க இருக்கும்  அகில இந்திய வேலை நிறுத்த போராட்ட த்தில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட  அலுவலர்களின் கோரிக்கைகளை முன்னி றுத்தி, திட்ட அலுவலர்களை திரட்டி போராட்ட த்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் சிஐடியு தென்சென்னை மாவட்ட செயலாளர் பா,பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமான பெண்கள் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டனர்.