tamilnadu

உள்துறை செயலாளர் ஆணைக்கு எதிர்ப்பு: தலைமைச் செயலக ஊழியர் சங்கம் புகார்

சென்னை, ஏப். 19 - உள்துறைச் செயலாளரின் ஆணை தேர்தல் நடத்தை விதிமீறல் என்று தமிழ்நாடு  தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிற்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரி சங்கர் ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் ஏப்.19ந் தேதி வாக்களிக்க ஏதுவாக பொது விடு முறை அளித்துள்ளது. உள் மற்றும் மது விலக்கு (ம) ஆயத் தீர்வைத் துறை பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக் களிக்க வேண்டும். துறையின் இரண்டாம் நிலை அலுவலர்கள் இதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்கு செலுத்தாத பணியாளர் களின் விடுப்பு கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும் என்று உள்துறை செயலாளர்  ஆணையிட்டுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகும். தனிநபர் அடிப்படைச் சுதந்திரத்தில் தலை யிடும் செயலாகும். குடும்பத்தில் உள்ளவர் களையே வாக்களிக்க நிர்பந்தப்படுத்த முடியாது. இந்த நிலையில், உள்துறை  செயலாளரின் ஆணை துஷ்பிரயோக மானது. 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால், அதனை ஒரு அதிகார  ஆணையினால் செயல்படுத்த, அதிகார  வரம்பிற்கு மீறி செயல்படுத்த முயல்வதை யும் ஏற்க முடியாது. எனவே, இந்த ஆணை யினை ரத்து செய்து, செயலாளர் மீது தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல மைப்புச்சட்டம் வழங்கியுள்ள தனிநபர் அடிப் படைச் சுதந்திரத்தினை காக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.