tamilnadu

img

‘சிந்து சமவெளி’ கண்டறிந்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் நன்றி!

சென்னை,செப்.20- சிந்து சமவெளி நாகரிகம் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியலாளர் ஜான் மார்ஷலால் கண்டறியப் பட்டது. ஜான் மார்ஷலுக்கு நன்றி கூறுகிறேன் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதி விட்டுள்ளார். சிந்து சமவெளி கலாச்சாரம் என்பது  திராவிட நாகரிகம் என ஜான் மார்ஷல் வரையறுத்தார். ‘இந்திய துணைக் கண்ட வரலாற்றை மறு வடிவமைக்கும் நாகரிகம் 100 ஆண்டுகளுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்டது.

சிந்து சமவெளி நாகரிகம் பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் கிமு 2600 முதல் கிமு 1900 வரை இருந்தது. 1924 ஆம் ஆண்டு சர் ஜான் மார்ஷல்  என்ற தொல்பொருள் ஆய்வாளரால் இந்த நாகரிகம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அப்போது  இந்திய தொல்லியல் துறையின் இயக்குநர் ஜெனர லாக இருந்தார். 

தெற்காசியாவில் முன்னர் அறியப்படாத மிகவும் வளர்ந்த கலாச்சாரங்கள் இருந்ததை இது காட்டு கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த பண்டைய கலாச்சாரத்தின் மேலும் மேலும் சான்று களை கண்டுபிடித்துள்ளனர், 

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறு வடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார்.நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து, “நன்றி, ஜான் மார்ஷல்” என்று கூறுகிறேன். ஐவிசி பொருள் கலாச்சாரத்தை சரியாக அறிந்து கொண்டு, அதை திராவிட பங்குடன் இணைத்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ  சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று எனது அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.