tamilnadu

img

மருத்துவ நிபுணர்களுடன்  தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங் களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டு உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட வாய்ப்புள்ளது. வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், முன்னதாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை...
இந்த கூட்டத்தை தொடர்ந்து 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

;