சென்னை,ஜன.27- வெளிநாட்டு முதலீடு களை ஈர்ப்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். வெளிநாட்டு நிறுவனங் கள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும் போது அந்த பகுதிகளில் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்ப டும். ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வரு கிறது.
அதன் ஒரு பகுதி யாகவே கடந்த ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடி யாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் தான் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்ய விரும்பும். ஆனால் இந்த முறை தென்மாவட்டங்களில் கணிசமான நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி. குறிப்பாக ராம நாதபுரம், திருச்சி, தூத்துக் குடி, திருநெல்வேலி அதிக மான முதலீடுகள் வந்துள் ளன.
இந்த நிலையில், முதலீட் டாளர் மாநாடு முடிந்த பின்னர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், வெளி நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக் கிழமை (ஜன.27) இரவு வெளிநாடு புறப்பட்டார். இதற்காக இரவு 9.40 மணிக்கு சென்னையி லிருந்து விமானம் மூலம் துபாய் சென்றடைந்தார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்லும் முதலமைச்சர் அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் செய்ய உள்ளார்.
ஸ்பெயின் சென்ற உடன், அங்குள்ள பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட் டோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, முதல்வர் அடுத்தமாதம் 7ஆம் தேதி சென்னை திரும் புவார் என எதிர்பார்க்கப் படுகிறது.