tamilnadu

img

காவல்துறையின் “விடுப்பு செயலி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை,ஜன.21- சென்னை பெருநகர காவல்து றையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”யை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டார். காவல் ஆளிநர்கள் தங்களி டம் உள்ள கைப்பேசியில் தமிழ்நாடு காவல் “விடுப்பு” என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகி யவற்றை வழங்க வேண்டி ஆன்லைன் மூலமாக சமர்ப் பிக்கலாம். இது வழிவழியாக அவர்களுடைய மேல் அதிகாரி களுக்குச் சென்றடையும். விடுப்பு ஆணை பெற்றுக்கொண்ட காவல் ஆளிநர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம். ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளைப் பொறுத்தவரை காவல் ஆணை யாளர் அலுவலக விடுப்புப் பிரிவு  மற்றும் நிர்வாக அலுவலர் சரி பார்ப்பிற்குப் பின், பணிப் பதிவே ட்டில் பதிவு செய்து காவல் துணை ஆணையாளருக்கு (தலை மையிடம்) விடுப்பு ஆணை பெறுவதற்கு அனுப்பப்பட்டு விடுப்பு ஆணை வழங்கப்படும். இந்தச் செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் மூன்று மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மணி நேரக் காலத்திற்குள் நட வடிக்கை எடுத்து மேலனுப்பத் தவறினால் படிப்படியாக காவல் ஆளிநர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளைச் சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி, காவல் ஆளி நர்களின் விடுப்பு எடுக்கும் நடை முறை சிரமத்தை முழுமை யாகக் குறைப்பதோடு, வெளிப் படையான தன்மையை உரு வாக்குகிறது. இணையதள வசதி இல்லாதவர்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மேம்ப டுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உள்துறை,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்கு நர் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.