சென்னை, ஜூன் 12- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்.20 முதல் டிச.20 வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்டில் நிற்காது.
பெங்க ளூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் லால்பார்க், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி-எண்-12608, 22626, 12658) செப் 20 முதல் டிச.20 வரை பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நிற்காது. அதே தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன், லால்பாக், சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் (22625, 12639, 12607, 12027) பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நிற்காது. மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16022), சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16021) செப்.19 முதல் டிச.19 வரை பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.
கன்னியாகுமரி - பெங்களூரு, தூத்துக்குடி - மைசூரு, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16525, 16235, 12657) செப்19முதல் டிச 19 வரை பெங்க ளூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலை யத்தில் நிற்காது. அதேபோல், பெங்களூரு - கன்னியாகுமரி, மைசூரு - தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20ஆம் தேதி முதல் டிச.20 வரை பெங்களூரு கண்டோன் மெண்ட் ரயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.