tamilnadu

img

‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்டத்தில் சென்னை மாணவர்

சென்னை,அக்.24- மருத்துவ படிப்பில் சேரு வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி  அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவர் உதித்சூர்யா சிக்கினார். மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசி ஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தினர். இது வரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர். இதை யடுத்து தமிழகம் முழுவ தும் உள்ள மருத்துவ கல்லூரி களில் மாணவர்களின் சான்றி தழ்கள், ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் (எம்.எம்.சி.) 2 ஆம் ஆண்டு படிக்கும் மாண வர் ஒருவர் மீதும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர் பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புகார்கள் சென்றன. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தேர்வு கமிட்டிக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டார். இவ்விவகாரம் குறித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் மாண வரின் தொடர்புடைய ஆவ ணங்களை கொடுத்துள்ளார். சென்னை அரசு மருத்து வக் கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, “புகாரில் சிக்கி யுள்ள மாணவர் முதல் ஆண்டு பாடங்களில் தேர்ச்சி  பெறவில்லை. இதையடுத்து அவருக்கு சிறப்பு வகுப்பு களை நடத்தினோம். ஆனால்  அவர் பாடங்களை படிக்க சிரமப்பட்டார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் ஏன்  பாடங்களை புரிந்து கொள்ள  கஷ்டப்படுகிறார் என்று ஆச்சரியம் அடைந்தோம் என்றார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட்  தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.