சென்னை ஐ.ஐ.டி யில் பி.டெக் 3 ஆம் ஆண்டு படித்து வந்த ஆந்திரவை சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டூர் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ஐஐடி யில் 2016 ஆம் ஆண்டுக்கு முதல் இதுவரை 13 மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்துகொள்ளும் பெரும்பான்மையான மாணவர்கள் சாதி ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்தியா முழுக்க இருக்கும் ஐஐடி யில் மாணவர்கள் தர்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகிவிட்டது.